Wednesday 14 December 2016

அலைகளில் தென்றல் வந்து அசைந்தாடும்

 அலைகளிலே தென்றல் வந்து விளையாடும் 
ஆனந்தம்  என்ன உறவா? சுகமா? 
என்று மஞ்சுளா முத்துராமனை பார்த்து கேட்கும் இப்பாடல் மறுபிறவி என்ற திரை படத்தில் அம்மா அருமையாகப் பாடியது.  அலைகளின் பின்னணியில் தென்றலை பாய்ந்தது என்றால் இந்த பாடலும் அதில் முக்கியமான இடத்தை பிடிக்கும்.

        அந்த ஆரம்பம் இருக்கிறதே அலைகளில் என்று தொடங்கும்போது உடலுக்குள் மின்னலைகள் பாயும் உணர்வு.  உண்மையிலேயே இது தெய்வீக வரம்தான்.  இப்படி ஒரு குரல் அமைய என்ன கொடுப்பினை செய்தாரோ ? தெரியவில்லை.

    தாயமையும்  காதலும் ததும்பும் அப்பாடலில் மஞ்சுளா மிக அருமையாக ஒரு தாலாட்டும் தாயை  போலவே நடித்திருக்கிறார்.

பறவை இசை  பாடுவதும் உறவா சுகமா 
எங்கும் ஆனந்தம் பாடிடும் இயற்கை  
இன்ப  பாட்டொன்று  பாடும் இளமை 
இங்கு நான் பாடும் தாலாட்டு புதுமை 

எங்கும் இன்பம் பொங்கும் ஒரு சூழ்நிலை நம் மனதில்.  ஒரு புறம் அலைகள், மறுபுறம் இசை அலைகள் , இன்னொரு புறம் இனிய குரல் அலை அப்பாப்பா  இனிமை இளமை இன்பம் என அத்தனையும் வாரி வழங்கும் ஒரு பாடல்.  இதை பாட அம்மாவால் மட்டுமே முடியும்  வேறு யாராலும் முடியாது என்பது என்னுடைய தீர்மானம் ஆன முடிவு.

               மடியில் தவழும் குழந்தை போல  மிக அருமையான அழகான அமைதியான நடிப்பை  காட்டுகிறார். 

அவளே சுகம் கேட்பதில்லை அதுதான் பெண்மை 
அவள் துணையோடு வாழ்வது இன்பம் 
அதை சுவை யாக செய்வது மஞ்சம்
                                       இதை நான்  சொல்ல நேர்ந்தது துன்பம்                                           

என ஒவ்வொரு வரியிலும்  தேன் ஊற்றப்படுகிறது : காதுகள் இன்ப மழையில் நனைகின்றன.  

                இசை அமைத்தவர் டி .ஆர் . பாப்பா.  மிக நல்ல இசை .  மிக அருமையான படப்பிடிப்பு .  புனர்ஜன்மம் என்ற மலையாள படத்தில் சூர்யகாந்த கல்படவில் என்ற பாடலை நினைவூட்டுவது போல் இருப்பினும் இது ஒரு தனி ரகம் ராகம்.    இதில் மேலும் ஒரு இனிய செய்தி இரு பாடல்களையும் பாடியவர் இன்னிசை அரசியே.  பலர் இப்பாடலை நினைவு கூருகிறார்களோ  இல்லையோ என்னளவில் இது ஒரு சிறந்த பாடல்.  இந்த பெருமை முழுதும் அம்மாவையே சாரும்.  



அமுதம் தொடரும்..... 

Friday 9 December 2016

அணையாத தீபம் ஜெயலலிதா & சோ

அணையாத தீபம் மனிதாபிமானம் உள்ளார்கள் இங்கே யாரோ யார் யாரோ? 

திரு . சோ அவர்கள் நடித்து இயக்கிய, முதல்வர் ஜெயலலிதா நடித்த யாருக்கும் வெட்கமில்லை என்ற படத்தின் பாடலை தற்போது பதிவு செய்வது பொரு த்தமாகவும் , இருவருக்கும் செய்யக் கூடிய அஞ்சலியாகவும் இருக்கும் என நினைக்கிறேன்.


இருளில் ஓளி தீபம் ஏந்தி வரும் முதல்வரின் நடிப்பும் பாவனையும், அந்த நடிப்புக்கேற்ப இயைந்து வரும் சுசீலாம்மாவின் குரலும் பாடலின் தரத்தை எங்கேயோ கொண்டு போகின்றன.

லேசான சோகம் இழையோடும் சுசீலா அவர்களின் கணீர் குரலும், மென்மையான நடிப்பை வெளிப்படுத்தும் ஜெயலலிதா அவர்களின் இனிய தோற்றமும் நம்மை பிரமிக்க வைக்கின்றன.

கால் போன ஜீவனை தோள் மீது வைத்து காப்பாற்றி வைத்தான் சித்தார்த்த தேவன்,... பாவங்கள் சிலர் செய்ய நான் பாவியானேன்.. என பாடும் போது சில விஷயங்கள் நம் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.

நபி நாயகம் தன் நகர் மாறி சென்றார்.....
எல்லோர்க்கும் தாயான மாகாளி சக்தி.....
கலை மாது மேரி ஓர் விலைமாது என்று.... 

என்று பாடி பௌத்தம், இஸ்லாம், கிறிஸ்தவம், இந்து என அனைத்து மதங்களையும் ஒரு பாடலில் இணைத்து இருப்பார் பாடலாசிரியர். மத ஒற்றுமையை ஒரு பாடலில் கூறியதுவும் இப்பாடலுக்கு ஒரு சிறப்பே. 


இந்த பாடலுக்கு இசை வழங்கியவர் ஜி.கே. வெங்கடேஷ் என கேள்வி பட்டிருக்கிறேன். பாடலாசிரியர் யார் என தெரியவில்லை எனக்கு. 

இரு பெரும் ஆத்மாக்கள் இனைந்து உருவாக்கிய படமும் பாடலும் மற்றொரு பெரும் பாடகியின் குரலால் ஜொலிக்கின்றன. காணொளிக் காட்சி அத்தனை திருப்தியாக இல்லை. 

RIP AMMA & CHO.


https://youtu.be/H9Jq2o6AUV4

அமுதம் தொடரும்...