Saturday 4 February 2017

வினுடே ஜனுலாரா ஸ்ரீ வெங்கடேஸ்வருணி சரிதமு

வினுடே ஜனுலாரா ஸ்ரீ வெங்கடேஸ்வருணி  திவ்ய சரிதமு வினுடே ஜநூலாரா பாரத   திருப்பதி அணி ஒக்க திவ்ய க்ஷேத்திரமு கலது 
பக்துலா பாலிடி ஷாந்திகாந்திவை காமதேனு வேலயு 
நிரூபமானமு பரமாத்மபுதம்மு திருமால பதி மகாத்யமு  

               இதேக்கடி நியாயம் என்ற படத்தில் அம்மா பாடிய யில்லை இல்லை  அம்மா பொழிந்த அமுதம் என்றே இந்த பாடலை சொல்லலாம்.  கதா  கால க்ஷேப வடிவில் அமைந்த இந்த பாடல் மிக அற்புதமானது என்றே நான் கருதுகின்றேன் .  என் மனதுக்கு பிடித்த பாடல்களில் இதற்கொரு தனி இடம் உண்டு.

            திருப்பதி நகரத்தில் கடன் பட்ட ஒருவனை ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி காப்பாற்றியதை மிக அழகான அற்புதமான குரலால் பாடி நம்மை மகிழவித்திருப்பார்.

                   இடையிடையே கதை கூறுவதும் அதனை தொடர்ந்து பாடல் வருவதும் போல அமைந்த அற்புத வடிவம் இது என்றால் மிகையில்லை. கத்யம் போல  தோற்றமளிக்கும் பாடல் எனவும் கூறலாம்.

நீதி மன்றத்தில்.  ஏமாற்றப்பட்ட ஒருவனுக்காக நீதிபதி கூறுவது  சிரிப்பை வரவழைக்கும்.
எமாய்யா ஒ வெற்றி சூறையா தெளிவிலேணி பிட்டி புல்லயா 
அப்பு தீசாவ்னி முட்டு குண்டாவு 
தாக்கலா       இம்மண்டே சூப்பமண்டாவு 
உன்ன சாக்ஷி ஒக்கடு  போ யாடான்டாவு 
செப்பவய்யா  ஏமி செயமண்டாவு 

என நக்கலாக கேட்பார் பாருங்கள் இல்லையில்லை கேளுங்கள் அசத்திடுவார்

ஓ  வெங்கடேஸ்வரா ஆபத்தை முக்குல வாடா 
அனாதை ரக்ஷகா காபாடவா நண்ணு காப்பாடாவா .....
என்றெல்ல்லாம் பாடா தென் மலை நம் காதுககளில் பொழியும் அந்த தருணங்கள் நம்மை எங்கேயோ  திருப்பதிக்கே கொண்டு செல்லும் என்பது மிகையில்லை .

கேட்டும் பார்த்தும் மகிழுங்கள்.  ஒரு முழுமையான கதை ப்பாடலை கேட்ட திருப்தி நமக்கு உண்டாகும். 


அமுதம் தொடரும்.....
.

https://www.youtube.com/watch?v=plJJt_BEUPQ

Thursday 2 February 2017

அடிமை நான் ஆணையிடு ஆடுகின்றேன் பாடுகிறேன்

அடிமை நான் ஆணையிடு ஆடுகின்றேன் பாடுகிறேன் 
அடிமை நான் ஆணையிடு ஆடுகின்றேன் பாடுகிறேன் 
 மதுவை நீ ஊற்றிக்கொடு   மயங்குகிறேன் மாறுகிறேன் 

அடிமை நான் ஆணையிடு ஆடுகின்றேன் பாடுகிறேன்  அம்மாவின்  விளைந்த அற்புதப் பாடல். இந்த பாடலை  பலர்  அம்மாவின் அடிமை ஆகிவிட்டனர்  என்றாலும்  இந்த  கெட்டவர்கள் அது எந்த தலை முறையாக இருந்தாலும் அடிமை ஆகி விடவே வேண்டும் என்பது எனது முடிவு.

கணவனின் கட்டுப்பாட்டுக்குள்ளான ஒரு குடும்பப்பெண் மது அருந்தி விட்டு பாடுவது போலெ  அமைந்த இந்த பாடல் அம்மாவின்  எங்கேயோ எட்டாத உயரத்துக்கு சென்று விட்டது.
மது எடுத்தேன் உன் மலரடி நனைத்தேன் பாத பூஜைகள் முடித்தேன் 
புது மயக்கம் இந்த மது மயக்கம் பொறுத்திரு பழகி வரும் வரைக்கும்  
என்று பாடுகிற  போது அம்மாவின் குரலில் இணையும் வேதனை, வெறுப்பு, கேலி, பரிதாபம் எல்லாருடைய உள்ளத்தையும்  உருக்கும்.   அந்த கணவனை  எல்லார் மனமும் வெறுக்கும்.

தன் வாழ்வு தன்  கணவனால் இந்த நிலைக்கு தள்ளப்பட்டு விட்டதே என்னும் வேதனையம் விரக்தியும் தன குரலில் பிரதி பலிக்க இந்த வரிகளை பாடுவார்,

சபை தனிலே நின்றாடிடும் பெண்மை சாவியை ஆடிடும் பொம்மை 
பால் மயக்கம் சிறு பள்ளியிலே நூல் மயக்கம் பின்பு பள்ளியிலே கல் மயக்கம் நீ கொடுக்கையில் கண் மயங்கும் இந்தப்பெண் மயங்கும் 


பாடலின் இடையில் லாலாலாலா என்று  ஒரு ஹம்மிங் கொடுப்பார் பாருங்கள்.  என்ன  ஒரு உல்லாசம். இறுதியில் வரும் மயக்கம் அப்பப்பா . அருமையான பாடல்  அருமையான
நடிப்பு. வெண்ணிற ஆடை நிர்மலாவின் சிறந்த நடனம் எல்லாம் சேர்ந்து ஒரு பாடலை உன்னத நிலைக்கு கொண்டு சென்றுள்ளன.

https://www.youtube.com/watch?v=XvbnNnkjGnQ

அமுதம் தொடரும்......