Saturday 21 January 2017

அரும்பரும்பா சாரம் தொடுத்த அழகு மலர் மாலை இது !



அரும்பரும்பா சாரம் தொடுத்த அழகு மலர் மாலை இது ஆராரோ 
தரையினிலே தவழ்ந்து வந்த தங்க நிலா மேனி இது தாலேலோ 
மகளே நீ மயங்காதே மணிவிளக்கே கலங்காதே 
பூச்சூடும் புது பூந்தேரே  பாலாறே!

 1992 ஆம்  ஆண்டு வெளிவந்த சின்னத்தாயி திரைப்படத்தில் இளையராஜா இசையில் அம்மா பாடிய பாடல். நடிகை சபீதா ஆனந்த் என நினைக்கிறேன்.

                 அருமையான பாடல். ஆனால் அம்மா ரசிகர்கள் தவிர மற்றவர்களிடம் ரீச் ஆனதா? என்று தெரியவில்லை. 

              ஆடவன் ஒருவனால் ஏமாற்றப்பட்டு அவன் மூலம் ஒரு பெண் குழந்தையையும்  பெற்று சமுதாயத்தில் வேசி நிலைக்கு தள்ளப்பட்டு வேறு எவனோ ஒருவனுக்கு வைப்பாட்டியாக வாழும் ஒரு பெண்ணின் அவலக்குரல் அம்மாவின் இனிய காத்ரத்தின் மூலம் துயரத்துடன் வழிகிறது.  


                    தான்   பட்ட துயரங்களை வேதனையை துயரத்தை தன் மகளும் அனுபவிக்க கூடாது என்பதை மிக அருமையான கதை போல தாலாட்டு போல கூறுவதை  அம்மா  அனுபவித்து பாடியிருப்பார்.   ஆனாலும் பின்னாளில் அந்த தாயின் கதையே அத்திரைப்படத்தில் அரங்கேறுவது வேறு விஷயம்.

        அந்த கஷ்டத்தை
ஒருவன் இசையினிலே ------ 
திசைமாறி நான் விழுந்தேனே 
மனித குணங்களையும்  
மாறும் இனங்களையும் அறியாமல் நான் தவித்தேனே 
நஞ்சை விட கொடிது ஆடவரின் மனது 
அன்னை  அதை அறிந்தால் அல்லல் பட்ட பிறகு 
ஏமாந்தாள்  தாயும் 
என்னை போல நீயும் 
ஆகி விடாதே பின்பு 
அவதி படாதே 
என்று பாடும் போது அனுபவ மிக்க பாடகி அனுபவமிக்க இசையில் வாழ்க்கையை  அந்த  அனுபவத்தை வெளிப்படுத்துவது என்பது பிற பாடகிகளால் கொணர முடியாது என்பதற்கு இந்த பாடலே ஒரு உதாரணம்,

                அனுபவம், இனிமை, இசை, வார்த்தை , அம்மா  இவை அனைத்தையும்  ஒன்று சேர்த்து பாடும் அம்மாவின் குரல் இந்த பாடலை வேறு தளங்களுக்கு கொண்டு செல்கிறது,    


                இரவு நேரங்களில் ஊர் உறங்கும் சமயங்களில் ஏதேனும் தனி இடத்தில் தனிமையில் இந்த பாடலை கேட்கும் அனைவரும் தங்கள்  வாழும் உலகத்தை விட்டு வேறு உலகுக்கு செல்வது நிச்சயம்.  அதை சாத்திய  படுத்திடுவது அம்மாவின் குரல் எனும் சத்தியம். ஒப்புக்கொள்கிறீர்கள்தானே!?! 

https://www.youtube.com/watch?v=d-Yaul5Dnn8

அமுதம் தொடரும்....

Thursday 19 January 2017

சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை

சொந்தமில்லை 
பந்தமில்லை வாடுது  ஒரு பறவை
அது தேடுது தன்  உறவை
அன்பு கொள்ள ஆதரவாய் யாருமில்லை உலகில் 
அது வாழுது  தன் நிழலில்  
அக்கக்கோ எனும் கீதம் 
அதுதானே அதன் வேதம் 

               இளையராஜாவின் முதல் திரைப்படமாக  வெளிவந்த அன்னக்கிளி திரைப்படத்தில் சுசீலா பாடிய இனிய  கீதம் .  சோகத்தை பிழிந்து  நெஞ்சத்தை கிழித்து கண்ணீரை வரவழைக்கும் ஒரு இனிய பாடல் .  அக்கக்கோ  எனும் வரியில் வழியும் சோகத்தினை  அவரை தவிர வேறு யாராலுமே பாட இயலாது.

           வாழ்வில் சோகத்தை தவிர வேறு எதையும் காணாத ஒரு பெண், அடைய நினைத்த சிறு மகிழ்வும் வேறு ஒருத்திக்கு  விட்டுக்கொடுக்கப்பட வேண்டிய சூழலை தன்  இனிய குரலால் ப்ரதிபலிக்கிறார் அம்மா .

           கோவிலுண்டு தீபமுண்டு 
தெய்வமுண்டு மலர்களுண்டு
பூஜை மட்டும் காண வரம் இல்லையே.

ஓடம் உண்டு நதியும் உண்டு 
நதியினிலே வெள்ளம் உண்டு 
அக்கரைதான் அருகில் வரவில்லையே 
இக்கரையில் குருவிக்கென்ன வேலையே !
                                 அக்கக்கோ எனும் கீதம் அதுதானே அதன் வேதம் !!

என்று  இழைக்கும் போது கரையாத மனமும் கரையும்.  கனியாத கல்லும் கசியும்,

             வாழ்வில் துயரமே நிலையாய் துயரமே வாழ்வாய் வாழ்ந்த அவள் தான் எதற்கும் பயன் படாமல் போனதை எண்ணியும், தன் வாழ்வு துன்பக்கடலில் வீழ்ந்ததை எண்ணியும் பாடுகிறாள் இப்படி .

பூவென்றால் தேனை வைத்து 
பழத்துக்குள்ளே சாறை  வைத்து 
பிறவிக்கெல்லாம் பெரும் பயனை வைத்தானே 

பாழும் அந்த குருவி என்ன 
பாவங்களே செய்ததென்று  
பரிசாக கண்ணீரை தந்தானே 
நாள் முழுதும் கண்ணீரை தந்தானே 
                           அக்கக்கோ எனும் கீதம் அதுதானே அதன் வேதம் !!



பாழும் அந்த குருவி என்ற வரியில் பாழும்  என்ற சொல்லில்  அம்மா காட்டும் பாவம் நம்மை வேறு உலகத்துக்கே கொண்டு செல்லும் சக்தி படைத்தது .

இனி தன்னால் எதுவுமில்லை தனக்கும் எதுவுமில்லை என்னும் கழிவிரக்கம் ததும்பும் இப்பாடலை தன்  தேன்  குரலால்  பாடுகிறார் அம்மா. இந்த பாட்டை சில திரை அரங்குகளில் தடை செய்ததாகவும் பின் மீண்டும் இணைத்ததாகவும் கேள்வி பட்டு இருக்கிறேன்.  என்ன இருந்தாலும் அம்மாவின் பாடல்களில் இது ஒரு வஜ்ரம் என்றால் அது மிகை இல்லை.  மணிமகுடம் சூட்டிய ஒரு பாடல் என்றாலும் மிகை இல்லை.  என்னை கவர்ந்த பாடல்களில் இதுவும் ஒன்று.  இது உங்கள் பார்வைக்கு.


அமுதம் தொடரும்.....


































யக்ஷியம்பலம் அடைச்சு

                    கந்தர்வ க்ஷேத்ரம்  எனும் மலையாள படத்தில்  அம்மா ஒரு முதியவருக்கும் ஒரு இளம் பெண்ணுக்கும் அற்புதமாக குரல் மாற்றி பாடியுள்ள  ஒரு அற்புதப்பாடல் .  

                    யக்ஷி அம்பலம் அடைச்சு
அன்னு துர்காஷ்டமியாயிருன்னு

ஓர் அழகிய குடும்பம் . ஒரு சிறுமி, அவளின் பாட்டி, தாத்தா. மிக அழகிய அந்த சிறுமி ஒரு நிலவிளக்கை கொண்டு வந்து வைத்தவுடன், அவளது பாட்டி யக்ஷியை நினைத்து பயம் தெளியும் வண்ணம் பாடும் பாடல்.

ஒரு முதியவளுக்கும், ஓர் இளம் பெண்ணுக்கும் ஒரே ஒரு பெண்மணி குரல் மாற்றி பாடும் போது ஏற்படும் வேறுபாடு சுசீலாம்மாவால் மட்டுமே கட்ட முடியும். அதை இப்பாடலில் நிரூபித்துள்ளார் அம்மா.

காட்டில் கரும் பன தலைமுடி சிக்கும் காட்டில்... என்னும் போது காற்றின் வேகம் நம் மனதில் உண்டாகிறது.

அந்த சிறுமி நடிகை யார் என்று எனக்கு தெரியவில்லை. மிகஅழகான நடிப்பு. பயம், மகிழ்வு, நடுக்கம் என எல்லா வகையான அபிநயங்களையும் வெளிப்படுத்துகிறாள். I

ஷங்கனி விளக்குமாய் தனியே போகும் சாந்திக்காரண்டே மும்பில் முருக்கான் பொதியில் சுண்ணாம்பு சோதி....நானும் நடிச்சிருன்னு.. என்று மோகினி கதையினை, பேய்கள் சுண்ணாம்பு கேட்கும் என்ற பழைய நம்பிக்கை உடைய ஒரு பாடலை பாடும் போது ஒரு உத்தியவளுக்குரிய குரல் ஒரு இளை யவளிடம் (1972) வெளிப்படுத்தும் உணர்வுகள் அற்புதம்.

கூடவே ஒரு முதியவரின் முறுகான் அதாவது வெற்றிலை பாக்கு போடும் கோணங்கி சேட்டைகள் பாட்டை உயர்த்துகின்றன.

மோஹிணியின் அழகை கூட நாபி சுழியின் தாழத்துவச்சவள் நேரிய புடைவை உடுத்தியுருன்னு என் புகழ்ந்திசைக்கிறாள்.

காட்டில் புள்ளுகள் சிறகடிச்சுணரும் காட்டில்... முதியவரின் பாடல் பகுதி நிறைவடைய சிறுமி வளர்ந்தவளாக மாறி,


முத்தஷ்ஷி கதையில் யக்ஷியை நின்னவள் மானத்தில் பறன்னுயர்ன்னு
யக்ஷி பனையுடே சொட்டில் அடுத்த நாள் எல்லும் முடியும் கிடன் நிறுன்னு.. என்று சாரதா பாடும் போது முதிய குரல் மாறி இளம் பெண்ணின் துள்ளல் துடிப்பும் மதுரமாய் நம்மை வருடுகின்றன.

கந்தர்வ க்ஷேத்ரம் என்ற படம் , தேவராஜனின் இனிய இசை, வயலார் ராம வர்மாவின் வரிகள், சுசீலாம்மாவின் இனிய குரல் எல்லாம் சேரும் போது ஒரு இனிய கானம் உருவாகாமல் போகுமா?

எத்தனையோ இனிய பாடல்கள் சுசீலா அவர்களின் மதுர குரலால் பெரும் புகழ் பெற்றுள்ளன. எளிய கேரள குடும்ப பின்னணியில் ஒலிக்கும் இப்பாடல் மிக இனிமையானது கேட்க கேட்க அலுக்காதது என்பதில் ஐயம் இல்லை.
https://youtu.be/OLRAOF2Z_oc
அமுதம் தொடரும்....