Thursday 19 January 2017

யக்ஷியம்பலம் அடைச்சு

                    கந்தர்வ க்ஷேத்ரம்  எனும் மலையாள படத்தில்  அம்மா ஒரு முதியவருக்கும் ஒரு இளம் பெண்ணுக்கும் அற்புதமாக குரல் மாற்றி பாடியுள்ள  ஒரு அற்புதப்பாடல் .  

                    யக்ஷி அம்பலம் அடைச்சு
அன்னு துர்காஷ்டமியாயிருன்னு

ஓர் அழகிய குடும்பம் . ஒரு சிறுமி, அவளின் பாட்டி, தாத்தா. மிக அழகிய அந்த சிறுமி ஒரு நிலவிளக்கை கொண்டு வந்து வைத்தவுடன், அவளது பாட்டி யக்ஷியை நினைத்து பயம் தெளியும் வண்ணம் பாடும் பாடல்.

ஒரு முதியவளுக்கும், ஓர் இளம் பெண்ணுக்கும் ஒரே ஒரு பெண்மணி குரல் மாற்றி பாடும் போது ஏற்படும் வேறுபாடு சுசீலாம்மாவால் மட்டுமே கட்ட முடியும். அதை இப்பாடலில் நிரூபித்துள்ளார் அம்மா.

காட்டில் கரும் பன தலைமுடி சிக்கும் காட்டில்... என்னும் போது காற்றின் வேகம் நம் மனதில் உண்டாகிறது.

அந்த சிறுமி நடிகை யார் என்று எனக்கு தெரியவில்லை. மிகஅழகான நடிப்பு. பயம், மகிழ்வு, நடுக்கம் என எல்லா வகையான அபிநயங்களையும் வெளிப்படுத்துகிறாள். I

ஷங்கனி விளக்குமாய் தனியே போகும் சாந்திக்காரண்டே மும்பில் முருக்கான் பொதியில் சுண்ணாம்பு சோதி....நானும் நடிச்சிருன்னு.. என்று மோகினி கதையினை, பேய்கள் சுண்ணாம்பு கேட்கும் என்ற பழைய நம்பிக்கை உடைய ஒரு பாடலை பாடும் போது ஒரு உத்தியவளுக்குரிய குரல் ஒரு இளை யவளிடம் (1972) வெளிப்படுத்தும் உணர்வுகள் அற்புதம்.

கூடவே ஒரு முதியவரின் முறுகான் அதாவது வெற்றிலை பாக்கு போடும் கோணங்கி சேட்டைகள் பாட்டை உயர்த்துகின்றன.

மோஹிணியின் அழகை கூட நாபி சுழியின் தாழத்துவச்சவள் நேரிய புடைவை உடுத்தியுருன்னு என் புகழ்ந்திசைக்கிறாள்.

காட்டில் புள்ளுகள் சிறகடிச்சுணரும் காட்டில்... முதியவரின் பாடல் பகுதி நிறைவடைய சிறுமி வளர்ந்தவளாக மாறி,


முத்தஷ்ஷி கதையில் யக்ஷியை நின்னவள் மானத்தில் பறன்னுயர்ன்னு
யக்ஷி பனையுடே சொட்டில் அடுத்த நாள் எல்லும் முடியும் கிடன் நிறுன்னு.. என்று சாரதா பாடும் போது முதிய குரல் மாறி இளம் பெண்ணின் துள்ளல் துடிப்பும் மதுரமாய் நம்மை வருடுகின்றன.

கந்தர்வ க்ஷேத்ரம் என்ற படம் , தேவராஜனின் இனிய இசை, வயலார் ராம வர்மாவின் வரிகள், சுசீலாம்மாவின் இனிய குரல் எல்லாம் சேரும் போது ஒரு இனிய கானம் உருவாகாமல் போகுமா?

எத்தனையோ இனிய பாடல்கள் சுசீலா அவர்களின் மதுர குரலால் பெரும் புகழ் பெற்றுள்ளன. எளிய கேரள குடும்ப பின்னணியில் ஒலிக்கும் இப்பாடல் மிக இனிமையானது கேட்க கேட்க அலுக்காதது என்பதில் ஐயம் இல்லை.
https://youtu.be/OLRAOF2Z_oc
அமுதம் தொடரும்....

No comments:

Post a Comment