Wednesday 26 October 2016

சூட்டைக் குறை!

                           சூட்டைக்  குறை 

பாலைவனம் பரவுவதால் சோலைவனம் குறைகிறது!
ஆலைகளோ வருவதால் அமுதமழை குறைகிறது!!
நிலத்தடி நீர் குறைகிறது நீள்  வானம் கிழிகிறது!
புலம் பெயரும் மக்களினால் புகைகிறது துடிக்கிறது!!

மணிக்குமணி மரக்கூட்டம் மறைகிறது உலகைவிட்டு!
மணமகனின் மண்டையில மரங்களின்றி புழுவெட்டு!!
ஆலைகளின் புகையால் காற்றினிலே சீர்க்கேடு!
ஆறுகளின் கழிவுநீரால்  நீருக்குப் பெருந்தட்டு!! 

குளிர்பதன சாடினத்தல் கிலோரகார்பன் பெருகுது பார்!
குளிர்நிறந்த துருவங்கள் குறைவின்றி உருகுதுப்பார்!!குளுகுளென இருந்த பூமி கொதிகும்பி ஆகுதுபார்!
குவலயத்தின் கடல் மட்டம் குடுகுடேன் உயருதுபார்!!

கடலோர நகரமெல்லாம் கடகடென மறைந்திடும் பார்!
சுடும் வெப்பக்க கதிராலே கடும்புற்று பரவிடும்பார்!!
ஓசோனின் கிழிவாலே உலகமெலாம் நடுங்குதுப்பார்! 
ஓயாமலுழைப்பதாலே இவையெல்லாம் நின்றிடும் பார் !!

சூரியனின் கொடுங்கதிர்கள் சுட்டுநம்மை எரிக்குதுபார்!
சூதில்லா  மக்கள் வாழ்வு சூட்டினாலே அழிந்திடும்பார்!
கொதிக்கின்ற கதிராலே புவிவெப்பம் உயர்ந்திடும்பார்!
கொள்ளு தினை தானியமும் விளையாமல் நின்றிடும் பார்! 

பசுமைக்குயிடில் வாயுவால் பசும்புல்லும் அழிந்திடும்பார்! 
பச்சிளம் குழந்தைகளும் பசியால் துடித்திடும்பார்!! 
 பார்முழுதும் நீருக்கேன் பல போர்கள் நடந்திடும் பார்!  
பனிமலைகள் உருகிப்பாரில் பெருவெள்ளம் பரவிடும்பார்!! 

சக டுவெள்ளம் கடுவறட்சி கடுங்குளிரும் நிலவிடும்பார் !
சுடுகதிரை உருவாக்கும் சுய நலமி மனிதனை பார் !!
எழில் நிர்ணயித்த மரம்தானேயே நட்டு நீயும் வளர்த்திடப்ர்பார்  !
எழிலி நிறை நீரும் கிட்டும்  ஏந்தியதை   வாழ்ந்திடப்பார்!!  


No comments:

Post a Comment