Wednesday 26 October 2016

விரஹா நூறு நூறு தரஹா!

               விரஹா நூறு நூறு தரஹா! விரஹா பிரேமா காவ்யதா சாஹி தரஹா !! இந்தப்பாடல்  எடக்கல்ல்லு குண்டதே  மேலே என்ற கன்னடப்படத்தில் இடம் பெற்ற  பாடல்.  ஜெயந்தி நடிக்க புட்டண்ணா கனகல்   இயக்கிய திரைப்படம் .

                  இப்போது கூட கன்னட திரையுலகின் சூப்பர் ஹிட் பாடல்களில் ஒன்று.  ஒரு மேடை நிகழ்ச்சியில் கூட பி. சுசீலா அம்மாவும் நடிகை ஜெயந்தியும் பேசும் போது நான் திரைப்பட உலகில் புகழ் பெற்றதற்கு அம்மாவின் பாடல்களே காரணம் என்று  கூறினார்.

                 கணவனை  பிரிந்த காரிகை தன விரஹத்தை வெளிப்படுத்த பாடுகிற பாடல் அந்த பாடலில் வெளிப்படும் வேகம்  அந்த குரலில் வெளிப்படும் தாகம் நம்மை பிரமிக்க வைக்கிறது.

              " அறவே முக்கி தரவே ஹாக்கி விரக சஹிதே சஹிதே தாநெந்திதே "
காதல் வேகம் புலப்பட அதை அடக்கியாள முற்பட முயலும் அந்த பெண்ணின் துயரை எப்படித்தான் அம்மாவால் வெளிப்படுத்த முடியும் என்ற ஆச்சர்யம் இன்னும் என்னை விட்டு நீங்கவில்லை! எப்படி என் விரகத்தை  சகித்து கொள்ள முடியும் என்ற ஆதங்கம் அப்பட்டடமாக வெளிப்படும்.

                      "பாவாந்தரங்கத்தல்லி  அல்லோல கல்லொலா
                   ப்ரேமாந்தரங்கத்தல்லி  எந்தெந்த கோலஹாலா!!
             ஸ்ருங்க  தன்வா பயஸி  ஹு வ்வு மனசே பாவே பாவே தானேந்திதே!
  இந்த வரிகளுக்கும் பின் வரும் ஹமிங் இருக்கிறதே அப்ப்ப்பப்பப்பா !!!
மனதுக்கும் விரஹத்தால் ஏற்படும் அல்லோலகல்லோலத்தையும்  காதல் கொண்ட உள்ளத்துள் ஏற்படும் கோலா கலத்தையும்  அம்மா வெளிப்படுத்தும் கோலாகலம் வர்ணிக்க முடியாதது.

                                     " கந்தர்வ லோக தல்லி  ரோமாஞ்ச ராத்திரி
                                        மதி சந்திர மஞ்சத்தல்லி   ரஸஜீவ ராத்திரி "
எண்டு இரவு நேர வேதனையை துடிப்பை வெளிப்படுத்தும் அந்தக்குரலின் இனிமையை ரசனையை இப்போதும் நம்மால் உணர முடியும்.

                நிற்காமல் ஓடும் நதி பூலை அசையாமல் ஓடும் ஆறு போல  அம்மாவின் குரல் விளைவிக்கும் விந்தை இன்னும் இன்னும் நினைத்து  பார்க்க கேட்க உள்ளம் மகிந்த கொண்டே  இருக்கிறது.

அமுதம் தொடரும்... ...

No comments:

Post a Comment