Saturday 12 November 2016

குங்கும சந்தியா க்ஷேத்ர குடங்கரே


"குங்கும சந்தியா க்ஷேத்ர குடங்கரே குளிச்சு தொழான் வன்ன வார்முகிலே
இள வெயில் காஞ்சு காஞ்சு நடக்கும் நினைக்கிப்போள் 
இள மானினே போலெ செறுப்பம்"

ஜி. தேவராஜனின் இசையில், மாங்கொம்பு கோபாலகிருஷ்ணன் எழுதிய பாடல். 

அம்மா பாடியது. 1976 இல் வெளிவந்த மிஸ்ஸி திரைப்படத்தில் இடம் பெற்றது.

இப்பாடலின் ஆரம்பமே விடியற்காலை நேர பூபாள ராக இசை போலவும், மெதுவாக மொட்டு அவிழும் மலர் போலவும், பனி காலத்து சூடே இல்லாத இதமான சூரியன் போலவும் அம்மாவின் அழகு குரலில் விரிகிறது.

" சந்தன குளிர் காற்று திளகும் நின் சிறகுகள் உள்சாகத் திடுக்கம்!
விண்ணிலே மந்தாகினியோடுழுகும் நின் 
கண்ணிலோர் இந்திர சாப திளக்கம்!"

அப்படியே இந்த வரிகளை அவர் குரலில் கேட்கும் போது, பனி நிறைந்த ஒரு மலை மீது சில்லென்று அமர்ந்து , உள்ளும் புறமும் குளிர்ச்சி பொங்க (பட்டுப்பூச்சியை) இந்திர சாபத்தை, வண்ணங்கள் ஒழுக பார்ப்பது போன்ற ஸ்வர்க்கானுபவம் நம் மனதில் மாயை போல் உருவாகிறது இல்லையா?

"ஆகாசம் வேனலின் திர நீக்கி வர்ஷத்தின் துகில் அணிஞ்சனையும் போள்
யத்ர மேலோஜ்வல ........... ஷோத்ரம் போல் மண்ணில் வீனுடைஞ்சாலோ"
இவ்வரிகளை கேட்கும் போது உள்ளம் எங்கோ பறக்கிறது. சமஸ்க்ருதம் கலந்த மலையாள மொழி அம்மாவின் அழகான உச்சரிப்பில் மேலும் அழகு பெறுவதையும் இனிமை அடைவதையும் எண்ணி புளகாங்கிதம் ஏற்படுகிறது.

என் மனதை கவர்ந்த இப்பாடலின் சுகானுபவத்தை இழக்க விரும்பாமல் நான் இப்பாடலின் காணொளியை காண்பதே இல்லை. 

இரவு நேர இருளில் இப்பாடலை அமைதியான சூழலில் கேட்போருக்கு மட்டுமே பாட்டின் அருமையும், படகின் பெருமையும் இனிமையும் விளங்கும் என்று நினைக்கிறேன். சரிதானே!!

அமுதம் தொடரும்....

No comments:

Post a Comment