Saturday 12 November 2016

ஏலே இளங்கிளியே என்னாசை பைங்கிளியே

ஏலே இளங்கிளியே என்னாசை பைங்கிளியே...!
எத்தனை பேர் தாலாட்டு பாடினாலும் தென்னிந்திய குழந்தைகள் அனைவருக்கும் ஒரு குரலின் தாலாட்டு மட்டும்தான் மிகப்பிடிக்கும். பெரும்பாலோர் அந்த குரலின் தாலாட்டைக் கேட்டு வளர்ந்தவர்களேதான். அக்குரல் யாருடையதென்று நான் சொல்ல வேண்டியது இல்லை.

80 களின் இறுதியில் வெளிவந்த நினைவுச்சின்னம் திரைப்படத்தில் நடிகை ராதிகாவுக்காக பாடிய பாடல். 

குழந்தையை தாலாட்டும்போது மித உயர்வாக பாடும் மரபையொட்டிய பாடல். ஆண்டாள் பாடலின் முதல் வரியை இதில் பயன் படுத்தி இருப்பார் பாடலாசிரியர்.

ஏலே இளங்கிளியே என்னாசை 
பைங்கிளியே பாலே பசுங்கொடியே பைந்தமிழின் தீஞ்சுவையே
நோன்பு பல நானிருந்து வேண்டும் வரம் வேண்டி நிற்க தெய்வம்தான் தந்தது உன்னைத்தான் இளங்கிளியே"
என்று அம்மா பாடும்போது கிராமத்து பாடல் போன்ற உச்சரிப்பில் நம்மை மகிழ் வைக்கிறார்.

கிராமத்து தாய் போன்ற வடிவில் ராதிகா நடிக்கும் போது அவர் வடிவிக்கேற்ப தன குரலையும் உச்சரிப்பையும் மாற்ற முடிவது அவரால் மட்டுமே முடியும்.

"குழலினிது யாழ் இனிது என்பர் தம் மக்கள் மழலை சொல் கேட்காதவர் " என்ற வள்ளுவரின் வரிகளை சற்றே மாற்றி,


"குழலோடும் யாழ் ஓடும் இசை கேட்குகும் பொழுது மழலை உன் குரல் போல இசையாவதேது. யாரடி உன்னை படைத்தார் அன்னையும் தந்தையும் இல்லை உன்னை என் கையில் கொடுத்தார் தெய்வமா நம்பவுமில்லை. அன்பிலே அன்பை இணைத்து .........'
இணைத்து தன் குழந்தை தெய்வத்தால் வழங்கப்பட்ட வரம் என நினைக்கும் தாய் மனதை கவி எழுத அதை தன் குரலால் பெருமிதம் பொங்க பாடி நம்மையும் மகிழ்விக்கிறார் சுசீலாம்மா.

"மலை மீது ஓடி வரும் நதி, அலை வீசும் கடல்" என்றெல்லாம் தன குழந்தையினை புகழும் தாய் மனம் தன குழந்தையின் மீது கண் பட்டு விடக்கூடாது என " மூடடி வாசற் கதவை கண்கள்தான் பட்டுவிடுமே பாடடி பேச
பாசக் கவிதை நெஞ்சம் தான் கேட்டு விடுமே" எனக்கூறி தன் தாய் பாசத்தைவெளியிடும் பாடல், மிக அழகுற அம்மாவின் சற்றே கனத்த குரலில் வெளி வருகிறது.

90 களின் தொடக்கத்தில் வந்த இப்பாடல் மிகப்பெரிய அளவில் புகழப்ப டவில்லை என்றாலும் என் மனதை கவ்விய தாலாட்டு பாடல்களில் இதுவும் ஒன்று என்பதில் ஐயமில்லை

அமுதம் தொடரும்.......

https://youtu.be/iAbOJ1wF5sY

No comments:

Post a Comment