Thursday 3 November 2016

ஹதினால்கு வர்ஷா வனவாசதி ந்தா மரளி பந்தெளு சீதே

ஹதினால்கு வர்ஷா வனவாசதி ந்தா மரளி பந்தெளு  சீதே 
மரளி பந்தெளு  சீதே!  
ஸார்வ பௌமா ஸ்ரீ ரமா சந்திரன  ப்ரேமதே ஆக்ரே ஒண்தே
 தா செந்தெளு ஆ மாதே !

சரபஞ்சரா  திரைப்படத்தில் நடிகை கல்பனா நடிப்பில்  கொலு நிகழ்ச்சி ஒன்றில் பாடுவது போல அமைந்த இப்பாடல் அம்மாவின் இனிய குரலில் ஒலிக்கும்.

               இராமாயணத்தில் சீதை மீண்டும் காட்டுக்கு போன கதை மொத்தமும் அவள் பட்ட வேதனைகளும். லவ குசர்களின் ஜனனமும் அத்தனையும் அம்மாவின் குரலில் வேதனையோடு வெளிப்படும் போது அதற்கு கட்டுப் படாதவர்  எவரும் இருக்க முடியாது.

    " அக்னி பரீக்ஷய சதவ பரீக்ஷய புரி யாதளு  சீதே
           அக்னியே ததித்ததே போஷித்தீரா சீதே புனீ தே! சீதே புனீ தே!!
             அல்பாஷாநத கல்பிதே மாடுதே அழுகித்தே ஸ்ரீ ராமா 
             சீதே  கலூஷிதே சீதே திவேஷிதே   "  

என்று உயிரை கொடுத்து  பாடும் பொது உருகாத மனமே இருக்க முடியாது. சீதையின் துயரை எண்ணி வருந்தாமல் இருக்க முடியாது. 

                      அந்த பெண்  எப்படியெல்லாம் கர்பிணியாகி  காட்டில் கஷ்டப்பட்டாளோ ? என்ற எண்ணம்  நம்  மனதில் கட்டாயம் தோன்றியே  தீரும். அக்னி பரீட்சையின்  விளைவு ஒரு பெண் மனதை எந்த அளவுக்கு காயப்படுத்தி இருக்கிறது  என்பதை அம்மாவின் குரல் மூலமே அறிய முடிகிறது.

"பூர்ண கர்ப்பிணிய புண்ய ரூபிணிய கண்டனு வால் மீகி 
லோக மாதகே சோக கார கவே நிர்த்தயி ராமா !நிர்த்தயி ராமா!!
பர்ண குடீரீத லவ குசா ஜனநா சீதைக்கு சாந்தி நிகேதனா!"

               என்று வால்மீகியிடம் சீதை அடைக்கலம் புகுந்ததையும், லவ குசனின்  பிறப்பே அவளுக்கு ஓர் ஆறுதல் நிலையயை அளிப்பது  போலிருந்ததையும் மிக அருமையான கணீர் என்ற குரலில் கன்னட மொழியை துளி பிழை இல்லாமல் பட முடிந்தது அம்மாவால் மட்டுமே முடியும் என்பது என் நம்பிக்கை.  ஏன்  எல்லாருடைய நம்பிக்கையும் அதுவே .

         இராமாயண  கதையின் பின் பாதியை மிக அழகாக எழுதிய கவியின் நினைவோ இசை அமைப்பாளரின் நினைவோ  அந்த பாடலின் நடிகை கல்பனா நினைவோ நமக்கு வருவது இல்லை.

     நமது நினைவில் கனவில் மனதில் கற்பனையில் கலந்து இருப்பவர் ஒருவர் மட்டுமே  அவர்தான்  நமது எவெர்க்ரீன் சுசீலா அம்மா ..

அமுதம் தொடரும்.. .. ..


No comments:

Post a Comment