Saturday 12 November 2016

அஷ்ட மங்கள்ய சுப்ரபாதத்தில் அர்ச்சனா புஷ்பம்

அஷ்ட மங்கள்ய சுப்ரபாதத்தில் அர்ச்சனா புஷ்பம்
https://youtu.be/yhyPzy2_q9M

'அஷ்ட மங்கள்ய சுப்ரபாதத்தில்
அர்ச்சனா புஷ்ப மால்யமாய்
நித்யவும் க்ருஷ்ண பூஜ செய்யுன்ன பக்த லோலயாய் ராதயாய்!"

க்ருஷ்ண பக்தர்கள் மட்டுமல்ல. அஷ்ட மங்களங்களும் வேண்டுவோர் யாராயிருந்தாலும் கேட்க வேண்டிய கிருஷ்ண கானம்.

செந்நாய வளர்த்திய குட்டி படத்தில்
, மாங்கொம்பு கோபால கிருஷ்ணன் இயற்றி, அர்ஜுனன் இசை அமைத்த பாடலிது.

ஆரம்பமே அமர்க்களமாக கணீர் என்ற தொனியில் அம்மா ஆரம்பிக்கும்போது அதில் நாமும் ஒன்றுபடுகிறோம். தினமும் க்ருஷ்ண பூஜை செய்ய விரும்பும் ராதயாக மாறிவிடுகிறோம். கிருஷ்ண பிரேமிகளாய் நம்மை மற்றும் சக்தி அந்த இனிய குரலுக்கு இருக்கிறது போலும். பல கிருஷ்ணன் பாடல்களை பாடிய குரல் அல்லவா!?!

"வஸ்ர மேக விரலி லாகாசம்
வஜ்ர மோதிரம் சார்த்தும்போல்
எண்டே மௌனமனோரதத்திலே
மஞ்சுள மயில்பீலிகள்
நின் கிரீடத்தில் சூடுவான் இனி எந்து தாமசம்? கிருஷ்ணா கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா..."

இவ்வரிகள் நம் காதுகளில் ஒலிக்கும் பொது நம் கண்முன்னே கிரீடத்தில் மயில் பீலி அசைந்தாட , ஆழிலாயின் மீது படுத்து தன கால் விரலையே சுவைக்கும் குழந்தை கண்ணன் ப்ரத்யட்சமாய் கட்சி தருவது எப்படி? இசையலா? பாட்டாலா? பாடியவராலா? இவை அனைத்தும் சேர்ந்தா?

"இந்திரநீல தடாகமாய் மாறும் ஈ மிழிகள் நீ கண்டுவோ
மாரிலே குளூர் சந்தன துளி மான்யத நீ அறிஞ்சுவோ
சுப்ரசாதங்கள் நேடு வான் எண்டே கிருஷ்ண நாதனே
கிருஷ்ணா கிருஷ்ணா ஸ்ரீ கிருஷ்ணா!"

அழகிய கண்ணனின் நீல விலிகளையும், அதை காண்போரின் மணக்க குளிர்ச்சியையும், தன் குரலால், அதுவும் கண்ணன் கையில் உள்ள புல்லங்குழலாய் வெளிப்படுத்தும் அம்மாவின் குரல் ஜாலம் நம்மை வசிய படுத்தி கிருஷ்ணனிடம் ஈர்க்கிறது. 

எப்படிப்பட்ட பாட்டாடாயிருப்பினும் அது சென்று சேரும் வாகனம் பாடுபவரின் குரலே. அம்மாவின் தங்க ரத்த குரல் எனும் வாகனம் ஏறி வரும் இப்பட்டு கிருஷ்ண கானங்களில் மிக சிறந்த ஒன்று என்பதில் எனக்கு ஐயமில்லை. உங்களுக்கும் அப்படித்தானே!

அமுதம் தொடரும்.......

No comments:

Post a Comment