Saturday 12 November 2016

கண்ணு துறக்காத்த தெய்வங்களே!

கண்ணு துறக்காத்த தெய்வங்களே!
கரையான் அறியாத்த சிரிக்கான் அறியாத்த களிமண் ப்ரதிமகளே!
மறக்கு நிங்களீ தேவதாசியே! மறக்கூ மறக்கு!
விரக்தியின் விளிம்பில் நின்று பாடும் பாடல்.

சோகத்தின் உச்சத்தை வாழ்வின் துயரத்தை விவரிக்கவொண்ணா வார்த்தைகளில் அடிபட்ட குயிலின் துக்கத்துடன் நம்மிடம் பகிரும் இசை தேவதையின் குரல்.

'ஆயிரம் ஆயிரம் அந்தபுரங்களில் ஆராதீச்சவள் ஞான்! நிங்கள் ஓரிக்கள் சூடி எறிந்தொரு நிஷாகந்தி ஆயி ஞ்சா ன்.!"

இரக்கமே இரங்க கூடிய சூழலில் இரங்கத் தக்க இந்த பாடலை தன இனிய குரல் மூலம் பாடி நம்மையும் இரங்க விக்கிறார் சுசீலாம்மா.

"கண்ணீரில் முங்கிய துளசி கதிராய் கால்கள் வீணவள் நான்!
கால் கல் வீண வள் ஞ்சான். !"

1967 இல் வெளி வந்த அக்னிபுத்ரி என்ற மலையாள திரைப்படத்தில் நடிகை ஷீலாவுக்காக பாடிய இந்த பாடலை கேட்கும் போதே அந்த குரலின் சோகம் நம் இதயத்தை பிழிகிறது.

மிக சிறப்பான இசை , ஆனால் நடிகர் பிரேம் நசீரின் பாடலுக்கு சிறிதும் பொருத்தமில்லாத நடிப்பும், முக பாவங்களும், ஷீலாவின் மிகையில்லாத நடிப்பு எல்லாம் சேர்ந்து உயிர் பெறுவது அம்மாவின் அழகு குரலால்தான் என்பதை எல்லாரும் ஒப்புக்கொண்டேதான் ஆக வேண்டும்.

கால்கள் வீணவள்; கால் கல் வீணவள் என்று சொல்லை பேதப்படுத்தி அதன் பொருளை வேறுபடுத்தி நம்மை ஆனந்தத்தில் ஆழ்த்துகிறது கான தேவியின் குரல். 

சோகப் பாடல்களின் உச்சத்தில் நிற்கும் இப்பாடல் மலையாள திரை உலகின் evergreen பாடல்களின் பட்டியலில் உச்ச இடம் பெற்று இருப்பதே பாடலின் வெற்றி பாடகியின் வெற்றி. அப்பாடகி வாழும் காலத்தில் நாமும் வாழ்ந்து அதை ரசிக்கும் பேறு பெற்றதே நமது வெற்றி. 

கண் திறக்காத தெய்வங்கள் நம் காதைதிறந்து பாட்டை கேட்க வைத்ததே நமக்கு கிடைத்த வெற்றி.

அமுதம் தொடரும்

No comments:

Post a Comment